கண்ணன் ஏமாந்தான்

கண்ணன் ஏமாந்தான்
அவன் காதலி ராதையை
அருகில் இருந்த பார்வையை -மாற்றி
முதல்பக்தனாய் பார்க்க முற்பட்டான்
மாறுவேடனாய் உலகிற்கு
புறப்பட்டான்
ஆதவன் விழிக்கும் முன்பே
அவள் முகம் பார்த்திடவே
பக்தனாய் அவளின் ஆலயம்கண்டான்
முதல் பக்தன் அவனென்றாலும்
பின்னால் முந்திக்கொண்டது
பெருங்கூட்டம்
காரணம் என்ன தெரியலையாம்
கையில் எண்ண பணமில்லையாம்
தரிசன சிட்டுகள் முன்னிற்க
பின்நின்ற கண்ணன் ஏமாந்தான்
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (29-Nov-16, 12:55 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 75

மேலே