ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பார்க்க அழகு
பயன் இல்லை
போலிப்பனைமரம் !

வளைக்கலாம்
இரும்பையும்
நெருப்பிலிட்டால் !

தேவைப்படுகிறது
கணக்குப்பொறி
படித்தவர்களுக்கு !

வஞ்சகம்
வருங்கால வாரிசுகளுக்கு
நெகிழி !

வைத்தவர் இல்லை
வழங்கியது பலன்
மரம் !

கணக்கில் அடங்காது
வண்ணங்களின் எண்ணிக்கை
மலர்கள் !

உழைத்தவர்கள் கவலையில்
உழைக்காதவர்கள் மகிழ்வில்
மாறுவது என்றோ ?

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Dec-16, 12:49 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 204

மேலே