பொறுப்பு
எல்லா பிரச்சினைக்கும்
மூல காரணம்
*****************************
என்ன நடந்து விடப் போகிறது
என்று எல்லோருக்கும்
அலட்சியம்....
தமிழனும்
தன் நிலையில் இருந்து தவறுகிறான்.
சொந்தமான கச்சதீவை தந்து விட்டு
இன்று படுகிறோமே....
நம் சொந்த மண்ணான
இலங்கையை
அயலவன் வந்து ஆள விட்டு விட்டோம்.
எல்லாம் நம் ஒற்றுமையின்மை....
வந்தாரை வாழ வைக்கும் பண்பு....
நமக்குள்ளேயே குள்ள நரிகள்....
சுயநலம்.....
தன்னை மட்டுமே பார்க்கும்
சுயநல குறுகிய எண்ணம்....
நாளைய பற்றிய
நாளைய மக்களை பற்றிய
எண்ணம் இல்லை....
பொறுப்பில்லா நிர்வாகம்......
யார் எப்படி ஆனால் நமக்கென்ன
நாம் நன்றாக இருக்கிறோமா....
இதுவே எல்லா பிரச்சினைக்கும்
காரண காரியம்.....
~ பிரபாவதி வீரமுத்து