தனிமை
...........................
இதுவரை என்னை தாக்கியது எதுவுமில்லை
அந்த மழலை அழுகுரலை விட....
செப்பனிட்ட வார்த்தைகளில்தான்
நான் சாய்ந்து கிடந்தேன்
என்பதை மறுபடியும் நினைக்க
மறுக்கிறது மனசு...
தாகம் தீர்க்க தாளில் கிடைக்கும்
மலை நீராயினும் -
பெரிது அவர்களுக்கு...
ஆயிரம் முறை செதுக்கியும்
சிதைந்து போகவில்லை
நொந்து போன மனசு
இப்போதெல்லாம் கதைப்பதற்கு -
யாருமில்லை தனிமையைத்தவிர....
............