சுடர்

மின் விளக்குகள் எரியும்
வீடுகள் தீர்மானிக்கின்றன
விளக்கு சுடர்விடும்
வீடுகளில் வாழ்பவர்கள்
வறுமையானவர்கள் என்று.
மின்சாரக்கட்டணம் கட்டாமல்
துண்டிக்கப்படுகின்ற நாட்களில்
அல்லது மின்சாரமற்ற நாட்களில்
எரிகின்ற சுடரானது எப்போதுமே
தீர்மானித்து வைத்திருக்கிறது
தான் எரியும் வீடுகளில்
விரட்டப்படுவது வெளிச்சத்தின்
வறுமை என்பதை ..
*மெய்யன் நடராஜ்