கனவு
எதோ கிரஹத்திற்கு.,
இலக்கின்றிச் செல்லும் பறவையின் நுனிச்சிறகைப் பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு…
இருண்ட தேசத்தில்.,
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
பெண்ணொருத்தி உதிப்பதாக ஒரு கனவு…
சுவைத்துவிட்டு நிலத்திலிட்ட விதை
நீர் விடும் முன் நெடுமரமாக நிமிர்வதாய் ஒரு கனவு…
கனவின் அர்த்தம் புரியாமல்.,
உறக்கம் கலைத்து விழித்தெழும்
சாபம் பெற்றவனாய் நான்…