அமைதிவழி போராளிகளுக்கு அர்ப்பணம்

மறத்தமிழன், மறத்தமிழன் மாங்கா இல்லடா - அவன்
மானத்துக்கு பங்கம்வந்தா சீறும் சிங்கம்டா…!
பீட்டா என்ன நம்மநாட்டு நாட்டாமையாடா…? அந்த
நாட்டாமைய விரட்டாம ஓய மாட்டோமடா…!”
அடிபணிந்துப் போவதற்கு அடிமை இல்லடா - நீங்க
அடக்குமுறைய ஏவினாலும் அடங்க மாட்டோமடா
அமைதிவழியில் எங்கள் பயணம் தொடருமடா – அதை
அகிலமே வியக்கும் வண்ணம் செய்வோமடா…!
மண்சார்ந்த மரபுரிமை அவரவர் பிறப்புரிமையடா – அதன்
மண்வாசனை மாறாமல் பொத்தி காப்போமடா..!
மாணவர்களின் எழுச்சிக்கடலை பார்த்தாயாடா – அது
மக்களின் உணர்ச்சி அலையாய் மாறிவிட்டதடா..!
சென்னைமுதல் குமரிவரை மக்கள் தலைகளடா – தமிழரின்
ஜல்லிக்கட்டுக்கு தடைப்போட நீங்கள் யாரடா…? உன்
சென்னியை பிடிப்போமென்று நினைத்தாயாடா..- தமிழன்
முன்வைத்த காலை பின் வைக்க மாட்டானடா…!
வாடிவாசல் திறக்கும்வரை வீட்டுவாசலை மிதிக்க மாட்டோமடா
வாடி நாங்க வதங்கினாலும் வாடிவாசலை நீங்க மாட்டோமடா
கேடித்தணம் புரிகின்ற அரசியலை நம்ப மாட்டோமடா – தேர்தலில்
பாடுகோலு பையல்களை பந்தாடாமல் விட மாட்டோமடா..!
குட்ட குட்ட குணிந்தது போதுமடா தமிழா…! உன்னை
சட்டை செய்யாமல் விட்டவனை சட்டைப்பிடி தமிழா.!
எட்ட எட்ட ஓடியது போதுமடா தமிழா…! – இனி
எட்டுத்திக்கும் எட்டுவைத்து சாட்டைசுயற்று தமிழா..!


( பிடித்திருந்தால் share செய்யவும்)

எழுதியவர் : சாய்மாறன் (20-Jan-17, 9:42 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 78

மேலே