பெண் என்னும் பேதை

ஆரஞ்சும்
பச்சையுமாய்
அடர்ந்த பூக்கள்
நீலத்தில்
பொன் மஞ்சள்
குளித்திடும்
இரத்த சிவப்பில்
சிவந்த செங்காந்தள்கள்
தமிழ்ப் பெண்களுக்கு
சேலை வெகு அழகு தான்

வெண் முத்துக்குவியல்கள்
விளையாடும் அதரங்கள்
சுற்றிலும் சுழன்று விரியும்
மான் விழி பார்வைகள்
எங்கெங்கிலும்
மனோரஞ்சித மணம்

பேருந்தின் வேகத்திற்கும்
அசையாத இவள்
நியூட்டன் விதிகளுக்கு
அப்பாற்பட்டவள்

எதிர்வினைகளுக்கு
சிரித்திடப் பழகாதவளாய்த்
தெரிந்தாள்..

மறந்தும் சிரித்திட
முயற்சிக்கவில்லை

நிச்சயம் அவள்
மணமானவள்..

-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (3-Feb-17, 7:16 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : pen ennum pethai
பார்வை : 929

மேலே