அ - அன்னை
அ - அன்னை
அன்புடனே பண்புதனை
----- அறிவுறுத்தி வளர்த்தவளே !
அன்னையென நின்றவளே !
------ அகிலத்தின் பெட்டகமே !!!
அகமலர்ந்து முகமலர்ந்து
------ அருவியென கொட்டுகின்ற
அந்தமான ஊற்றாகி
------- அனைத்துலகை ஆள்கின்றாய் !!!
அந்திமாலை நேரத்திலும்
------- அதிகாலை வேளையிலும்
அணைக்கின்ற அம்மாவே !
------- அனைவருமே உன்னடிமை !!!!
அமைதியான இருப்பிடமே !
------ அளவான கண்டிப்பும்
அக்கறையும் சேர்ந்துவரும்
------- அரவணைப்பும் உன்சான்று !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்