ராஜா ராணி

*ராஜா ராணி* 🚶🏻🚶🏻‍♀
************************

ஒரு தெருவுல
ராஜான்னு ஒரு பையனும்...
ராணின்னு ஒரு பொண்ணும்...
இருக்காங்க....

ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து
ஒன்னாவே படிச்சி...
ஒன்னாவே வளர்ந்தவங்க....

பள்ளிக்கூடத்துல படிக்கும் போது
ரெண்டு பேருன் டியூசன் கூட
போனதில்ல...

இவன் படிச்சத அவ கிட்ட ஒப்பிப்பான்
அவ படிச்சத இவன் கிட்ட ஒப்பிப்பா...

இவங்க ரெண்டு பேர் பழகுறத பார்த்து
அவங்க அம்மா, அப்பா
பலதடவை பேசியிருக்காங்க....

"நாம... பேசாம ராஜாவுக்கும் ராணிக்கும்
கல்யாணம் பண்ணி வச்சிடலாம்...
பேர் பொருத்தம் கூட
அவ்வளவு நல்ல அமைஞ்சிருக்கு..."

உண்மையிலேயே
ராணிக்கும் ராஜவ ரொம்பப் பிடிக்கும்...!

ரெண்டு பேருக்கும் இப்ப இருபது வயது...

ஒரு நாள்
ராஜா ராணிக்கிட்ட போய்...
ரொம்ப நேரமா எதைய்யோ சொல்லனும்னு
நிக்கிறான்...
ஆனா சொல்ல மனசு வரல...

உடனே
ராணி... ராஜாவ பார்த்து...

" என்னடா ரொம்ப நேரமா
எதைய்யோ சொல்லனும்னு நிக்கிற
ஆனா சொல்ல மாட்டேங்குற...?"

ராஜா ராணிகிட்ட மெதுவா...
"இல்ல... சுத்தி ஆள் இருக்காங்க...!
சொல்றதுக்கு கொஞ்சம் வெக்கமா இருக்கு...!!

என்றதும் ராணி
" நாம வேணும்னா மாடிக்கு போய்டலாமா...
அங்க யாரும் இருக்க மாட்டாங்க...!

உடனே இவனும் தலையாட்ட...
ராஜாவும் ராணியும் மாடிக்கு போறாங்க...!

தனி அறை....!
அமைதியான சூழ்நிலை....!!
இவர்கள் இருவர் மட்டும்...!!!

ராஜா கொஞ்சம் தைரியத்த வரவச்சிக்கிட்டு
ராணி கிட்ட சொல்றான்...

உன்கிட்ட இத சொல்லாம இருக்க முடியல...
இத விட்ட எனக்கு சொல்ல வேற வாய்ப்பு கிடைக்கல...
என்ன கல்யாணம் பண்ணிக்குவியா...?

என்று சொன்னதும்...
ராணிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...!
உள்ளுக்குள்ள ஆசை இருக்கு...!!
ஆனா சொல்ல வார்த்த வரல...!!!

உடனே ராஜா...
"நா தப்பா எதுவும் சொல்லிடலைய்யே...?"
என்றதும்...

"ம்ம்ம்.... இல்ல... அதுவந்து..."
என்று இழுக்க...

சீக்கிரம் சொல்லுடி... யாராவது வந்துடப்போறாங்க...!

தப்பு இல்ல தான்... ஆனா....
என்று மறுபடியும் இழுக்க....

ராஜா சந்தோஷத்துல....
வேகமாக ஓட....

ஏய்... எங்க ஓடுற...

"இல்ல... நம்ம கூட படிச்சாலே கலையரசி....
பல்லுகூட பச்சரிசி மாதிரி
வெள்ளையா இருக்குமே...?

" ஆமா...!!!"

அந்த தெரு முக்குலதான் நிக்குறா...
அவ போகுறதுக்குள்ள
இத சொல்லிட்டு வந்துடுறேன்....

உடனே ராணி அதிர்ச்சியில்...
"அப்ப என்கிட்ட சொன்னது"

அதுவா...
அவ கிட்ட தப்பா எதுவும் சொல்லிடக்கூடாதுல்லா...
அதான் உன்கிட்ட ஒருதடவ ஒப்பிச்சி பார்த்தே....

என்றதும்
ராணி அந்த தெருமுக்குல எட்டிப்பார்க்க...
அங்கு யாரும் இல்ல...

அவன் மட்டும் தனியா நின்னு...
இவள பார்த்து சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சான்...😊

***********
*அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...*💘

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (10-Feb-17, 12:21 am)
Tanglish : raja raani
பார்வை : 274

மேலே