வீணையடி நீயெனக்கு - மரபு கவிதை
வீணையடி நீயெனக்கு
----- விருப்பமாக இசைக்கின்றாய் !
ஊணுதலும் விட்டுவிட்டேன் .
----- உறவாடும் உன்னாலே !
ஆணையிடு ஆருயிரே !
------ அற்புதங்கள் செய்திடுவோம் !
காணிக்கைத் தந்திடுவேன்
------ காதலினை எந்நாளும் !
மாணிக்க வீணைதனை
------ மரகதமே மீட்டுகின்றாய் !
பாணிப்பூ வைத்தென்னைப்
----- பரவசமாய் அழைக்கின்றாய் !
வீணாகும் உன்னிளமை
------ விலகாதே எனைவிட்டும் .
நாணயத்தின் நாயகன்நான்
------ நம்பிக்கைத் தாராயோ !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்