காளையே

மானம் காக்கும் காளையிது
மாணவர் சக்தியைக் காட்டியது,
சேனையாய்க் காளையர் கூடிவந்தே
செயித்துக் காட்டும் காளையிது,
வானம் பொழியும் பூமியிலே
வளத்தைப் பெருக்கும் காளையிது,
கோனெ உழவர் தரத்தினையே
கோபுரம் ஏற்றிடும் காளையிதே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Feb-17, 7:03 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே