காதல் காத்திரு பகுதி 9

இதுவரை....

சித்தார்த் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்க

இடையில் வந்த கதிரை கத்தி பதம் பார்த்தது.

அஞ்சலியை தலையில் பலமாக தாக்கியதால்,

அவள் கதிரின் உருவத்தை மறந்து

சித்தார்த்தைதான் கதிராக நம்பி வருகிறாள்,

சித்தார்த் அஞ்சலியிடம் பேப்பர்ஸ் குறித்து கேட்க

அவளோ பழைய கதையை

நினைத்துப்பார்க்கிறாள்...

பிளாஸ்பேக்

சித்தார்த் அழகிய, நிறமான, கிட்டத்தட்ட அனிருத்

போல உடல் கொண்ட இளைஞன்.

அவனுக்கு ஹியூமர் சென்ஸ் அதிகம். பெண்களை

சிரித்து சிரித்து தன் வலையில் விழவைப்பவன்.

அவன் அழகில் மயங்கி விழுந்தாள் அஞ்சலி..

ஆனால் காதலை சொன்னது என்னவோ

சித்தார்த்தான். அஞ்சலிக்கு சித்தார்த் மிகவும்

பிடித்திருந்தது. அப்படியிருக்கையில் ஒருநாள்


ட்ரிங்..ட்ரிங்........... ட்ரிங்...ட்ரிங்.........

எவன்டா அவன் தூங்குறவள டிஸ்டர்ப் பண்றது...

கடுப்பேத்திக்கிட்ட....

சித்தார்த் முகம் திரையில் தெரிய வேக வேகமாக

எடுக்கிறாள் மொபைலை..

அஞ்சலி: ஹலோ....

சித்து: ஹாய் அஞ்சலி.. எப்போ முழிப்ப...

அஞ்சலி: நா எப்போவோ முழிச்சிட்டேனே... இப்போ

சாப்டுட்டு இருக்கேன்...

சித்து: அதெப்டி மா தூங்கி எழுந்ததும்

மொதவேளயே சாப்பாடுதானா.. இந்த பிரஸ்

பண்றது குளிக்கிறது எல்லாம் இல்லையா? அதுவும்

காலைல அஞ்சரைக்கே

அஞ்சலி மணியை பார்த்துவிட்டு... ஷப்பா....

அஞ்சலி: ( இவன் இங்கதான் இருக்கானோ)

சன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறாள்.. வெளியே

சித்து தன் பைக்கில் காத்திருக்கிறான்...

அஞ்சலி: எங்க கூட்டிட்டு போற

சித்தார்த்: நா எங்க கூட்டிட்டு போறேன்... யார

கூட்டிட்டு போறேன்...

அஞ்சலி: எதோ சொல்றேன் சொன்ன.. அதான்

வெளிய எங்கயாச்சும்.....னு இழுக்கிறாள்

சித்தார்த்: பிரபோஸ் பண்ணிட்டா போதுமே..அங்க

கூட்டிட்டு போ..இங்க கூட்டிட்டு போனு...

அஞ்சலி:ஒன்னும் தேவயில்ல...

சித்தார்த்: சரி... நீ என்ன லவ் பண்றேனு ஒத்துக்கோ..

அப்போ கூட்டிட்டு போறேன்

அஞ்சலி: அதுலா முடியாது பே...

சித்தார்த்: ஓகே.. நா கிளம்புறேன்...டாட்டா

அஞ்சலி: டேய்...இருடா... என்ன சொல்ல வந்த... நா

உன்கிட்ட ஒன்னு சொல்லணும்....

நிகழ்காலம்....

சித்தார்த் கண்கலங்குகிறது.... சினி சித்தார்த்தை

பார்த்து முறைக்கிறாள்...

அஞ்சலி: கதிர் நீ ஏன்டா அழுகுற... அந்த *****

சித்தார்த் தான் என் லவ் வ மதிக்காம

போய்ட்டானே... பிராடு பய...

சினி: **** சித்தார்த்

சித்தார்த்: அடிங்க..என்னங்கடி ஆளாளுக்கு

பேச்சை நிறுத்துகிறாள் சினி.. கதிர்.. நீ ஏன்

கோபப்படுற... அஞ்சலி உனக்காக சாகுற அளவுக்கு

ரிஸ்க் எடுத்துருக்கா.... உன்ன அவ லவ் பண்ணாம

இதெல்லாம் செய்வாளா என்ன?


கதிர்(சித்தார்த்): அடடட... நா எப்போ இவள லவ்

பண்றேனு சொன்னேன்... நா புரபோஸ்

பண்றப்பதான் இவ என்ன மதிக்கலயே.. இப்ப

மட்டும் என்ன லவ்வாம்

ஈகோவினால் கோபப்படுகிறமாதிரி பேசிவிட்டான்

சித்தார்த்....

அஞ்சலி மீண்டும் அழுகிறாள்..... மனதுக்குள் (நா

என்னடா பண்வேன் அவன் லவ் எப்டியோ....நா

நிசமாத்தானடா லவ் பண்ணேன்... )

எழுதியவர் : அ.உதயகுமார் (27-Feb-17, 5:41 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 409

மேலே