என்ன செய்வேன் நான்

என்ன செய்வேன் நான்
என்ன செய்வேன் நான்
கண்களால் காதல் பேசும்
மௌனம்தான் உன் காதல் தேசம்
என்ன செய்வேன் நான்

அழகால் கலையாத மனம் கொண்டு
ஆசைக்கடங்காத வயதினிலே
காதல் விதைத்து போறவளே
என்ன செய்வேன் நான்

உயிரினில் ஒரு வலி
தரும் பார்வை வரும் இனி
உண்மை கண்ட கனவுபோல
என் காதல் வாடுதடி
என்ன செய்வேன் நான்

முதல் பார்வையில் என்னை தொலைக்க
மறுபார்வையில் மீட்டெடுக்க
மீண்டும் மீண்டும் நீயோ பார்க்க
ஜனனம் மரணம் உணர்ந்தேன் நான்
என்ன செய்வேன் நான்

கனவின் உளறல் உரக்க கதறல்
என் தனிமை புலம்பல் நீ
அது கவிதையாவதும்
வேற்று காகிதமாவதும்
உந்தன் பதிலில் உள்ளதடி
என்ன செய்வேன் நான் ///

எழுதியவர் : ருத்ரன் (6-Mar-17, 8:39 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 275

மேலே