புவியையும் வெல்வாளே

மண்ணிலே பெண்மை சக்தியி னுருவாய்
***மகிமைகள் புரிந்திடும் நாளும் !
எண்ணமும் செயலும் சிறப்புற விளங்கி
***ஏணியாய் ஏற்றிடும் வாழ்வில் !
வண்ணமாய் மாற்றி அற்புத மாக
***வசந்தமும் வீசிட வைக்கும் !
பெண்ணெனும் தீபம் வெண்ணிலா ஒளியாய்ப்
***பேணிடும் இல்லறம் நன்றே !

இன்முகத் தோடே இருளினை யகற்றும்
***இனியவள் என்றுமே பெண்தான் !
தன்னல மில்லாத் தகைமையை யுடையாள்
***தரணியில் நிமிர்ந்திடச் செய்வாள் !
துன்பமும் நேர்ந்தால் உரமுடை மனத்தால்
***துயரினைத் துடைத்திடத் துணிவாள் !
பொன்னொளிர் முகத்தில் புன்னகை யோடு
***புவியையும் வென்றிடு வாளே ....!!!

( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
(விளம் மா விளம் மா விளம் விளம் மா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (10-Mar-17, 2:50 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 70

மேலே