மெல்லப் புன்னகைத்தாள்

கண்ணால் கவிதை எழுதிடும் பெண்ணழகை
வெண்காகி தத்தில் எழுதினான்நல் ஓவியன்
பெண்ணழகைச் சொல்லினில் வைத்தான் உயர்கவிஞன்
பெண்மெல்லப் புன்னகைத் தாள் !

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா .

கண்ணால் கவிதை எழுதிடும் பெண்ணழகை
வெண்காகி தத்தினில் ஓவியன்-பெண்ணழகை
வண்ணநற் சொல்லினில் வைத்தான் கவிஞனும்
பெண்மெல்லப் புன்னகைத் தாள் !

ஒரு விகற்ப நேரிசை வெண்பா .

சற்று மாற்றி வேறு சொல்லினில்

கண்ணால் கவிதை எழுதிடும் பெண்ணழகை
வெண்காகி தத்தினில் ஓவியன்‍ - பெண்ணழகை
வண்ணநற் சொல்லினில் வைத்தான் கவிஞனும்
வண்ணக் கொடிசிரித் தாள் !

விரிக்க விரிக்க வெண்பா நீல வானம் போல் விரிந்து கொண்டே செல்லும் .

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-17, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே