உன் அழகெனும் மாயை ---முஹம்மத் ஸர்பான்
உன் மனதில்
என்னுயிரை
பூங்காற்றாக
தருகிறேன்
இது காதல்
மேல் சத்தியம்
உன் சிரிப்பின்
ஓசை கேட்டு
உறங்கிக்
கொண்டிருக்கும்
யுகப் பூக்களும்
கண் திறக்கும்
உன் கனவும்
என் கனவும்
கரையும்
திரையும்
போல் மோதிக்
கொள்கின்றது
யுத்த பூமியில்
உந்தன் விழிகள்
என்னை
பார்வைகளால்
சுட்டுக் கொள்கிறது
உன் மெளனத்தில்
பட்டாம் பூச்சிகளும்
பாட்டெழுதுகிறது
சேலை கட்டும்
உன்னை நான்
என் காதலென
கவிதையிடம்
சொல்கின்றேன்
வெள்ளம்
நீந்தும் நதியில்
வெள்ளைத்
தாமரை ஒன்று
குறும்புகள்
செய்கின்றது
பூங்காற்றும்
பொய் பேசும்
உன் தேகம்
வருடிப் போன
மயக்கத்தில்
நீ அமர்ந்த
பேருந்தும்
உலகத்து
அதிசயமாய்
பதியப்பட்டது