நான்தானா
சிரித்துக் கொள்கிறேன் எனக்குள்
எதையோ நினைக்கிறேன் மனத்துள்
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்க
ஆசையால் நெஞ்சம் படபடக்க
கண்ணாடியில் தெரியுது உன்னுருவம்
நீரிலும் தெரியுதடி உன் பிம்பம்
காதல் புயல் என்னைச் சுற்றுதடி
சிக்க வைத்த சாகசக் கள்ளியே
உன் நிலைமையும் இதுதானா
உன் மனதில் நான்தானா...!