பெண்மையைப் பேணுக

பெண்மையைப் பேணுக - வியனிலை மருட்பா ( செவியறிவுறூஉ )


பெண்மையைப் பேணுதல் பேருலகில் தான்வேண்டும்
கண்ணெனவும் காத்திட்டால் காசினி உய்வுறும் .
வண்ணமிகு நற்செயலாம் வாருங்கள் மானிடரும்
எண்ணம் சிறந்திட ஏற்ற நிலையிதுவாம்
பண்ணில் நானும் பாட
விண்ணிலும் ஒலித்திட வியனாய்ப் போற்றவே !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Mar-17, 1:04 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 61

மேலே