புத்தகம்

புத்தகம்...
சொற்களால் மனதை
சீர் செதுக்கும் உளி!......

புத்தகம்...
பல்லாண்டு சரித்திரத்தை
சொல்லால் தீட்டிடும்
ஓவியம்!...

புத்தகம்...
மனஞ்சிதறாது
குவியப்படுத்தும்
குவி ஆடி!....

புத்தகம்...
எண்ண அலைகளை
காட்சிப்படுத்தும்
அருங்காட்சியகம்!...

புத்தகம்...
பொருள்பட
கோர்க்கப்பட்ட
சொற்சங்கிலி!...

புத்தகம்...
கற்பு நெறி பேணி
இடைவிட்டு அமர்ந்த
சொற்களின் இருக்கை!...

புத்தகம்...
படைத்தவனை
காலத்திற்கும்
பறைசாற்றி நிற்கும்
நினைவகம்!...

புத்தகம்...
நேரத்தை நேர்த்தியாய்
திரிக்கும்
விசைத்தறி!...

புத்தகம்...
அறிவுப் பசியைத்
தூண்டிடும்
காயகல்பம்!...

புத்தகம்...
சொற்தேன்
ஊறுகின்ற
தீஞ்சுனை!...

புத்தகம்...
தனிமையை
இனிமையாக்கும்
ஈடிலா துணைவன்!...

புத்தகம்...
கரம் பிடித்தே
நடைபயிலும்
கைக்குழந்தை!...

எழுதியவர் : சு உமாதேவி (5-Apr-17, 9:36 pm)
Tanglish : puththagam
பார்வை : 2568

மேலே