உதடு ஒட்டாத கவிதை இது

உன் தேன் சுவை செவ்விதழ்களை
என் இதழ் கொண்டு தீண்டி கொள்ளவா !

உன் அழகு இதழ் வரிகளில் அழகாய்
கவிதை ஒன்று எழுதி கொள்ளவா !

என் உயிர் காதலை உன் இதழ்வழி
உன் இதயத்துக்குள் சேர்த்து கொள்ளவா !

உன் இதழில் எத்தனை வரிகள் இருக்கிறதோ
அத்தனை கவிதை எழுதுகிறேனே !

ஒரு தடவை உன் உதடுகள் தீண்ட
உன் விழி வழி அசைவால் உத்தரவு கொடு !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (6-Apr-17, 12:28 pm)
பார்வை : 3036

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே