மன்னிப்பாயோ

உயிரில் கலந்த
முதல் துளியோ !

உணர்வில் பூத்த
முதல் பூவோ !

பருவத்தில் தெரிந்த
முதல் உறவோ !

எல்லாம் நீயென்றே
நினைத்தேன் இதுவரை !

இல்லாத உறவை
இருப்பதாய் நினைத்தது
என் தவறோ !

என் உணர்வை
உன்னிடம் எதிர்பார்த்தும்
என் தவறோ !

காதல் எதிர்பார்த்தேன்
தரவில்லை நீயும் !

இன்றென் தவறுக்கு
மன்னிப்பை கேட்கிறேன்
தருவாயோ நீயும் !

எழுதியவர் : புகழ்விழி (20-Apr-17, 11:52 pm)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 4562

மேலே