லோக்குப்பாலுன்னு பேரு வையுடா மருது

அம்மா எம் மூத்த பையனுக்கு செயபாலுன்னு அப்பா பேரு வச்சாரு. ரண்டாவது பையனுக்கு தனபாலுன்னு பேரு வச்சாரு. இப்ப மூணாவது பையன் பொறந்திருக்கறான். அப்பா காலமாகி ரண்டு வருசம் ஆகுது.இந்தப் பையனுக்கு நீங்கதான் அம்மா பேரு வைச்சு வாழ்த்தணும்
😊😊😊😊😊😊
அதுக்கென்னடா மருது. எனக்கு இந்திப் பேரெல்லாம் தெரியாதுன்னு நெனச்சிட்டயா. நாந் தான் ஒரு நாளைக்கு பதினஞ்சு தொலைக் காட்சித் தொடர் பாக்கறவடா. அதில இந்தி மூணு, தெலுங்கு ரண்டு, ரண்டு கன்னடம், ரண்டு மலையாளம் ரண்டு. தொலைக் காட்சி செய்திங்கள்ல அடிக்கடி 'லோக்குப்பாலு, லோக்குப்பாலு' - ன்னு சொல்லறாங்கடா. அந்லப் பேரையே எஞ் செல்லப்பேரனுக்கு வச்சிருடா?
😊😊😊😊😊😊
சரிங்கம்மா. நீங்க சொன்னபடியே செய்வோம். நேரம் இப்ப நல்லா இருக்கு. தாமரையைக் கூப்பறேன். அவ வந்ததும் கொழந்த காதில மெதுவா 'லோக்குப்பாலு, லோக்குப்பாலு, லோக்குப்பாலு' -ன்னு மூணு மூணு தடவை சொல்லிடுங்கம்மா.
😊😊😊😊😊😊
சரிடா மவனே மருது .

எழுதியவர் : மலர் (28-Apr-17, 10:42 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 146

மேலே