உன்னை சுமந்த உள்ளம்
வெல்லம் சுமக்கும் எறும்புபோல்
உன் எவ்வனத்தை பருகும் என் நயனம்...
நெய்யூரும் பண்டம்போல்
உன் நினைவூரும் எனதுள்ளம்...
தற்போதே பூத்த அலர்போல்
எப்போதும் புதிதாய் உன்மீதான நேசம்...
இடிவீழ்ந்த விருட்சம்போல்
உன் திருமணம் அறிந்த என் கனவுமாளிகை...
உருகி ஒளி பரப்பும் மெழுகுபோல்
கரைந்தாலும் உன்னை வாழ்த்தும் என் காதல்...
கர்த்தா:- தமிழ் தாசன்