கண்சாடை -ஆ கார்த்திக்
பனாரஸ் பட்டு கட்டி
பாதிபூ வகுடெடுத்து
முகம் ஜொலிக்க மஞ்சளும்
அகம் மினுக்க அபரணத்தோடு
ஆகாயம் வியக்க
அடிமனசு தவிக்க
கொஞ்சி அடியெடுத்து வைத்தாலே
பஞ்சு போன்ற பாதத்தாலே
யென்னை நெருங்கி போகையில
நிழலாய் தொடர்கிறேன்
நிஜம்தான் நீயென
பட்டு வேட்டி கட்டிக்கிட்டு
பாவை உன்னை சேர தானே
மஞ்சள் கைரோட மனசு ஏங்குதடி
கண்கள் இமைமூட காரணம் கேட்குதடி
உன் கால் கொலுசு சத்தம் கேட்டு
கவிதைகள் விழிக்குதடி ..
காத்தாடி பொம்மை போல
காதலும் பறக்குதடி
கண்சாடை கட்டிவிட்டு
காதல் நம்மை சேர்க்குமடி
ஆ.கார்த்திக்