உன்னை வாழ்த்தும் மனது

பாடல் வரி.,

வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உன்னை எண்ணி வாழ்வதே என்னின்பம்
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க ...நலமாக ...நீ வாழ்க ...நலமாக ...

எழுத்து எனது.,

நீ மணக்கோலம் காணும் நாள் நான் காண கூடுமோ.,
உன் மன நாளில் உன் கண்கள் என்னை காண தேடுமா., அழகான பட்டுடுத்தி அதற்கேற்ற மாலை சூடி மஹராஜனாய் நீ வருகையில் மலர் தூவி உன்னை எதிர்கொள்ள தேவதயாம் வான்மகளின் முத்த மழை பொழிந்திடுமாம்.., தேவர்களும் பூ மாரி பொழிந்திடுவர் நன்னாளில் உன்னவளின் கை பிடிக்கும் அந்நாளில் உன்னருகில் நான் இருந்து மலர் தூவ ஆவல் கொண்டேன்

எழுதியவர் : மீனாக்ஷி கண்ணன் (12-May-17, 3:02 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 117

மேலே