என் வலிகள் - சகி

மௌனமாய் என்
மனதில் எனது வலிகளை
எண்ணிப்பார்த்தேன் .....

அனைத்திற்கும் காரணமே
நான் உயிராக எண்ணிய
உறவுகளே காரணமாகிப்போனது .......

உண்மையுமில்லை ....
உரிமையுமில்லை ....
உறவுமில்லை ......

தனிமையின் வலியில்
என் வாழ்க்கை ......

காதலில் கண்ட
காயங்கள் என்னிதயத்தை
வார்த்தைகளால் காயப்படுத்தியது ......

சந்தோஷத்தையும்
துக்கத்தையும் பகிர்த்துக்கொள்ளாத காதல்
என் வாழ்க்கையில்
இல்லாமல் இருப்பதே
நலம் என எண்ணினேன் ....

இன்று முழுமையாய்
விலகி விட்டேன் .....

இனி தனிமையுடனே
என் வாழ்க்கைப்பயணம்
தொடரும் ......

எழுதியவர் : சகி (12-May-17, 5:27 pm)
பார்வை : 543

மேலே