அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
இந்த பூமிக்கு தேவதையாய் வந்தவளே
உன்னுயிர் கொண்டு என்னுயிர் தாங்கியவளே
உன் உறக்கம் களைத்து நான் கண் உறங்க செய்தாயே
நம் உறவுகள் யாவும் நீ அறிமுகம் செய்தவையே
நான் வலி என அழுக உன் உயிர் நீங்கிட துடித்தாயே
நல்லவை தீயவை என வாழ வழி வகுத்து தந்தாயே
நான் இன்று சுவாசிக்கும் மூச்சும் நீ எனக்கு தந்தவையே
அம்மா உன் மடியே போதும் அதுவே எனக்கு சொர்க்கமே ...!!!!