வெறுக்கிறேன் போலி காதலர்களை

" நீயே என்னுயிர் ", என்று கூறி காதல் கொண்ட பெயர்களெல்லாம் உடலை விட்டு பிரியும் உயிராய், உடலழகு நீங்கி முதுமை வர முடிந்து போகின்றன திருப்தி தரும் உண்மை அன்பில்லா மானிடர்களிடையே...

சந்தேகம் கொள்ளவில்லையென்றே உதடுகள் உரைக்க இதயம் முழுவதும் சந்தேகமே நிறைந்திருக்க பல்லாண்டுக் காதலும் பாழாய் போகுமே...
சிறந்த இல்லறமும் பொய்யறமாகுமே...

உண்மையான அன்புக்கு அடிமையாய் இரு...
ஆனால், உண்மையான அன்பு அடிமையாக்க எண்ணம் கொள்ளாது...

காதலுக்காக கொடுமைகள் பல அனுபவித்து, காதலே முக்கியமென்று அன்பால் இணைந்து வாழும் இருதயங்களுக்கு மத்தியிலே வஞ்சத்தைக் கலந்து வெறுப்பை வளர்த்து பிரிவை உண்டாக்குகிறது குடும்பப் பொருளாதரம் என்னும் சூழ்நிலை...

சந்தோஷத்தில் உடனிருந்து துன்பத்தில் விட்டுச் செல்லும் சந்தர்ப்பவாதிகளின் இருதயங்களைத் தீ வைத்தே கொளுத்த வேண்டும் காதலென்று ஏமாற்றுவதாலே...

உண்மைக்காதலை நேசிக்கும் நான் காதலர்களை வெறுக்கிறேன் இருதயங்கள் காதலால் ஒன்றாக இணைந்தப் பிறகு," உனது வாழ்க்கை. எனது வாழ்க்கை. ", என்று பிரித்துப் பேசும் சுயநலம் குடிகொண்டிருப்பதாலே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-May-17, 9:56 am)
பார்வை : 683

மேலே