காலச்சக்கரத்தின் பிடியில் என் காதல்
என் காதலி உன்னை பிரிகையில் இதயம் வீர்ரென்று கத்தத்தான் செய்கிறது
ஏனோ மறைத்துக் கொள்கிறேன்,
மீசை அரும்பும் முன்பே
ஹாரமோன் சுரக்கும் முன்பே பூத்த
பாலகாண்டத்து காதல் அல்லவா
வலிக்கத்தானே செய்யும்
பிரிவு காதலை உணர்த்தும்
உண்மைதான்
முதல்முறை உன்னை பிரிகையில்
இதயத்திலிருந்து விழிவழியாய் வந்த இருதுளி கண்ணீரில் தான் என் காதலை உணரந்தேன்
பக்கத்து ஊர் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்தது கூட உன்னை பிரியமுடியாமல்தானோ என நினைக்கிறேன்
வேலைக்காக வந்த பிறகு
விழாக்காலங்களிலும்
விஷேச நாட்களிலும் மட்டுமே உன்னை காண காலச்சக்கரம் கருணை காட்டுகிறது
அச்சில நாட்களே என் வருடத்தின் வசந்த காலம்
இதுவரை விழிகளின் பின்புறம் கசிந்து கொண்டிருந்த என் ஊமைக் கண்ணீர் இன்று பிரவாகமெடுத்து எழுத்தாய் வந்திருக்கிறது என் காதலைச் சொல்ல
உன் தோழி முல்லை பெரியாறு தந்த பச்சை பட்டுடுத்தி
என்னைப் பாரத்து தலை கவிழ்த்து நெல்மனிகளை பற்களாய் காட்டி நீ சிரித்தது மட்டும்
நான் மீண்டும் மீண்டும் அசைபோடும் என்
உயிரின் உணவு
ஆம் என் ஊரே என் உயிரே
உத்தமபாளையமே உன்னையே காதலிக்கிறேன்
நான் மாட மாளிகை வேண்டவில்லை உன் மனதில் இடம் தந்தால் போதும்
நான் ஐந்திலக்க சம்பளம் வேண்டவில்லை உன் அருகாமை போதும்
உன்னில் உழவெனும் உறவு கொண்டு
உயிரெனும் பயிர்செய்து
ஒருநாள் உன்மடியிலேயே
உயிர் விட வேண்டும்
இப்படிக்கு
அன்புக் காதலன்
இப்னு சுலைமான்