நெருடலில் நெஞ்சம்

நெருடலில் நெஞ்சம்
உருகுதே உள்ளம்...
மருகும் மனதின்
ஓரத்தில் துயரம்.

கண்ணீர்த் துளிகளாய்
விழிகளின் வெளியே...
தொண்டை அடைத்து
சிதறிய துக்கம்.

இனியொருமுறை வேண்டா
தாங்க இயலாதே...
சோகத் தாலாட்டில்
கெட்டது உறக்கம்.

சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (23-May-17, 6:25 pm)
சேர்த்தது : yazhmani
பார்வை : 85

மேலே