புதிராய் ஓர் முரண் கவிதை

வாழ்த்துக்கள் உச்சமாய்
தீர்ந்து விட்ட மையின் எச்சமாய்

எழுதியதின் சொல்லாடல் அருமை

பொருளாடல் அதனினும் அருமை

வார்த்தை கோர்வை - அது
பாவையின் பார்வை ,,,

அவ்வளவு இனிப்பாய்
கன கச்சிதமாய் '''

இதில் இல்லா வார்த்தைக்கு ஏது அழகு ........

என்று இயல்பாய் என்னும் அளவு

நடுக்கம் இல்லா நளினமாய்
கோர்வைகள்

சருக்கம் இல்லா சகதியாய்
விரும்பி ஒட்டிக்கொள்ளும் அழகுகள்.

இது வரை ஏன் படிக்கவில்லை - என்று
எங்கும் --- கண் , மனம் ,

என்று எல்லாம் தோன்றிவிட ஆசை
இன்று இதை நீங்கள் படித்து முடிக்கையிலே.............................

எழுதியவர் : வான்மதிகோபால் (5-Jun-17, 3:41 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : puthiraay or muran
பார்வை : 287

மேலே