வரம் தரும் பொழுது

நாத குழல் துவாரங்களில்
வீசிடும் மெல்லிய காற்றின் இசை
கூவும் குயிலின் இன்னிசை
அதை கேட்டு ஆடுதம்மா
மயிலின் தோகை..
மேகங்களுக்கு இடையில்
வேடிக்கை பார்க்குது - என்
காலை கதிரவன்....
சப்தங்களின் ஒலியில்
துயில் கொண்டு கூவுதம்மா
கொண்டைக் கோழியும்....
அணிலின் நாதமும் பின்னணியில்
அலம்பிட மயங்கிய மரக்கிளை
இசையுடன் அசைந்திட
சின்ன குருவிகள்
காதல்
பொழிந்திட
இனிய நாடகங்களுடன்
பொழுது விடிகிறது.....

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (12-Jun-17, 8:54 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
பார்வை : 215

மேலே