சொர்க்கத்தின் குழந்தைகள்
புதியதாய் உருவாகிய
நீதி மன்றம்
குற்றவாளிகளே
நீதிபதிகள்
தண்டிக்க பட வேண்டும்
தவறு செய்யாதவன்
எழுதப்பட்டது
புதிய சட்ட விதிகள்
குற்றவாளிகளின் பாவத்தால்
அடைக்கப்பட்டவர்கள்
சிறைச்சாலைக்குள்
பாவத்தின் பிறவிகள்
வெளிவரு முன்னே
சமாதியாக்கப்பட்டனர்
விசாரணையின்றி
விரைவாய் நிறைவேற்றிய
மரண சாசனம்
சமாதி கட்டியவர்களின்
நிம்மதி பெருமூச்சு
முறையற்ற காதலால்
மூச்சியிழந்த
சொர்க்கத்தின் குழந்தைகள்