வெள்ளைமனம்

வெள்ளை மனம்

வெள்ளைமனம் கொண்டதாலே
------ வெண்புறாவே தூதானாய் !
கொள்ளைகொண்டாய் மனத்தினையும்
------- கோபுரமாய் நின்றிட்டாய் !


கள்ளமில்லை உன்னிடமே
------- கயவர்கள் கைப்படாத
கண்ணகியின் இனமும்தான் !
------- கண்ணியமும் நீதானே !


தூய்மையுமே ஏங்கிநிற்கும்
------ தூயவளாம் உனைத்தேடி .
வாய்மையுமே உனைச்சேரும்
------ வளமான வெள்ளைமனம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-17, 5:13 pm)
பார்வை : 94

மேலே