தமிழை காணவில்லை

"தமிழை காணவில்லை!"

தாயின் வயிற்றில்
அவளின் தூயதமிழைக் கேட்டாய்!
பிறந்தவுடன் சுற்றமும்
பாராட்டிய செந்தமிழைக் கேட்டாய்!
பள்ளி சென்றதும்
நுனிநாக்கு ஆங்கிலம் கேட்டாய்!
கல்லூரி முடிந்ததும்
வெளிநாட்டு வேலை கேட்டாய்!
பணமழை பொழிந்தபின்
உன் தாயை மறந்தாய்!
உன் தந்தையை மறந்தாய்!
உன் வீட்டை மறந்தாய்!
உன் நாட்டை மறந்தாய்!
கடைசியில் தமிழையும் மறந்தாய்!
நினைவில் கொள்ளடா
உன் மைந்தன்
"தமிழை காணவில்லை" என்ற
ஆங்கிலப்பலகை மட்டும் காண்பான்!

எழுதியவர் : விஜய் ஆனந்த் (26-Jul-17, 6:58 pm)
பார்வை : 490

மேலே