வசிக்கிறார்கள்

நான்
கண்டு கொள்ளாதவர்களும்
என்னைக்
கண்டு கொள்ளாதவர்களும்
உண்டு.

இவனிடம்
என்ன இருக்கிறது?
என்ன இருந்தால் என்ன?
என்ற எண்ணம்.

கண்டு கொள்ளாமல்
இருப்பதில்
சங்கடம் இல்லை.

தேவைகளின் பொருட்டு
இயங்குகிறது
மனித உலகம்.

மனிதர்கள் வாழ்கிறார்களா?
வசிக்கிறார்கள்.

எழுதியவர் : கனவுதாசன் (5-Aug-17, 12:27 pm)
பார்வை : 68

மேலே