ஏக்க மாலை ௩

எல்லாம் சிவன் செயலே
எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

செய்யும் செயல்கள்
சொல்லும் வார்த்தைகள்
ஓடிடும் வாழ்க்கையுமே...
எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

காண்பதும் எல்லாம்
உன்னையும் இல்லை
மெய்பொருள் காண்பதெங்கே.
சிற்றின்பம் கொண்டால்
பேரின்பம் கிடைக்குமா
மெய்யருள் காண்பதெங்கே.
எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

காமத்தின் பாதையில்
பேரின்பம் கிடைக்குமா
உணர்வே விழித்தெழுவாய்.
பாடும் ஓசைகள்
காதில் வீழுட்டும்
சிவனடி சேர்ந்திடவே.
எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

அடியேன் புலம்பல்
காதில் வீழுமா
அனைத்தையும் இழந்திடவே.
புலித்தோல் உடுத்தி
ஆடும் என் ஈசா
பற்றை அருதிடவே.
எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

திமிரை அறுத்திட
ஆணவம் அழித்திட
ஆண்டவன் அடியை வைக்க.
அருட்பெரும் தோதி
தனிப்பெரும் கருணை
அணு தினம் அழைத்திடவே.
எல்லாம் சிவன் செயலே
என்று சொல்வாய் அவனிடமே...

எழுதியவர் : சிவனடியேன் (11-Aug-17, 12:07 pm)
பார்வை : 95

மேலே