என் மனதினை ஆளுபவள்

வெட்கம் என்பதை அறியாமல்
என்னுடன் சுற்றி திரிந்த
என் அத்தை பெண்ணே.

நொண்டி நொண்டி உன்னை
தொட்டபோதும் அறியவில்லை
என் விரலின் தோலுக்கு.

தட்டான்பூச்சியின் வாலுக்கு கட்டிய கயிற்றுக்கும் உன் பார்வைக்கும்
இறுக்கம் புரியவில்லை அன்று.

நித்தம் ஒரு தாவணியுடுத்தி காலுக்கு கொலுசு மாட்டி என் முன்னே
அசையவிட்டு மெளன விதை
விதைத்து விட்டாய் காதிற்கு.

பட்டு புடவைக்கட்டி வெட்கத்தில்
என் எதிரே நின்று என் மனதினை
ஆளுமை கொண்டவளே.

என் அழகு தமிழச்சியே..............

எழுதியவர் : சூர்யா. மா (13-Aug-17, 4:32 pm)
பார்வை : 140

மேலே