தோல்வியின் இரகசியம்

தோல்வியே நீ என் ஆசான்
என்னையே நான்
உன்னை வைத்துதான்
அளவிட்டேன்...

உன்னை வெறுக்கிறார்கள்
புரியாதவர்கள்
நீ என்னை ஒவ்வொரு
முறையும் தழுவும் போதெல்லாம்
என் சிந்தனைக்கும் செயளுக்கும்
ஞானம் கூட்டப்பட்டது...

உன்னை பொறிவைத்து தான்
வெற்றியெனும் அவனுக்கு குறிவைக்கிறேன்...

இத்தனை உதவிகள்
நீ செய்தாலும்
இந்த உலகம் உன்னை புகழ்வதில்லை இகழவே செய்கிறது...

கனிந்த பழங்களை ருசித்து
உண்பவர்கள் மரத்தின்
வேரை நினைத்து பார்ப்பதில்லை
நீ வேரானவன்
மக்கள் பார்வையில் வேறானவன்...

தோல்வியே...
நான் வெற்றியெனும்
அவனை பற்றினாலும்
உன்னையும் மறப்பதுண்டோ
மறந்தால் வெற்றி நிலைப்பதுண்டோ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (7-Sep-17, 11:25 am)
பார்வை : 1067

மேலே