சுமைகள்

சுமைகள் !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்
பறக்கத் தெரியாத
பறவைக்கு
சிறகும் ஒரு சுமைதான் !
வாழத் தெரியாத
மனிதனுக்கு
வாழ்வே ஒரு சுமைதான்
பாடம் புரியாத
பள்ளி மாணவனுக்கு
புத்தகமே சுமைதான் !
சோகங்களையே
சுமந்துகொண்டு
நிற்கும் மனிதனுக்கு
வாழ்வே சுமைதான் !
பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை