தோழமை

மழைவிட்ட பின்
கதிரவன் தரும் வானவில்லாய்
என் மகிழ்வைக் கொண்டாட நீ இருந்தாய்!!

வெள்ளத்திற்கு பின்
கதிரவன் தரும் முதல் ஒளிக்கற்றையாய்
நான் சோர்ந்தபோதெல்லாம் நீ இருந்தாய்!!

என் மகிழ்விலும் சோகத்திலும் உடனிருந்த
உன் தோழமைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது!!

எழுதியவர் : பூர்ணி கவி (13-Sep-17, 8:04 pm)
Tanglish : tholamai
பார்வை : 453

மேலே