பனங்காட்டில்

பனங்காட்டில் காற்று மோத
***படபடத்தே ஓலை யாட
அனலேறின் முழக்கத் தோடே
***அடைமழையும் கொட்டித் தீர்க்கப்
பனம்பழம்பொத் தென்று கீழென்
***பக்கத்தில் விழுந்த தாலே
இனங்காண முடியா அச்சம்
***இதயத்தை அடைத்த தம்மா !

( அனலேறு - இடி )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Sep-17, 12:58 am)
பார்வை : 40

மேலே