ஒன்று சேரும் இந்த காதல்

கிளிகள் கொஞ்சுவதை
ரசித்த உன் கண்கள்

உன்னை ரசித்து கொண்டிருந்த
என்னை பார்க்க மறுத்தது ஏனோ !!

விடாது பெய்த மழையை போல
உன் உதடுகள் பேச

என்னை பார்த்தவுடன் நத்தை போல
சுருங்கி கொண்டது ஏனோ !!

வெடி ஓசையை கேட்ட
உன் காதுகள் கூட

என் பேச்சை கேட்க
தயாராக இல்லை

அப்படி என்ன
பாவம் செய்தேன்

உன்னை உண்மையாய்
காதலித்ததை தவிர !!

பத்து பொருத்தம்
வேண்டுமென்றால்
இல்லாமல் போகலாம்

ஆனால்
உனக்கு பொருத்தமானவன் நானடி !!

என்ன பொய்யான
ஆடம்பர வாழ்க்கை உனக்கு கிடைக்காது

மெய்யான அன்பு வாழ்க்கை
ஒன்று மட்டும் நிச்சயம் !!

நீ வருவாய் என காத்திருக்கிறேன்

முழு நிலவாய் வா

கருப்பு நிலாவாய்
ஏமாற்றி விடாதே !!

எழுதியவர் : senthilprabhu (20-Sep-17, 12:20 pm)
பார்வை : 131

மேலே