ஊர்தல்

ஊர்தல்
================================ருத்ரா

கொஞ்சதூரம் நீளமாய்
ஒரு நடை.
அப்புறம் அந்த வளைவு.
பிறகு
ஒரு நெளிவு.
எதிரே எந்த பட்டுரோஜாக்கள்
பாய் விரித்தால்
எனக்கு என்ன?
என்ற இறுமாப்பு.
வளைகாப்பு முடிந்த கையோடு
இத்தனை வளையல்களுடன்
கிளம்பி விட்டாயே!
என்ன அவசரம்.
எதுவும் பேசாமல்
"கிழக்கே போகும்"ரயிலாய்
அந்த "வளையல் பூச்சி"
ஊர்ந்து கொண்டே இருந்தது.
ஊர்தலும் ஊர்தல் நிமித்தமுமாய்!

===============================

எழுதியவர் : ருத்ரா (24-Sep-17, 10:09 am)
பார்வை : 52

மேலே