பாடம் சொல்லும் கவிதை..

துன்பமாய் நீ கவி எழுதும் பொழுது
உன் கண்கள் கலங்கவில்லையா..
இன்பமாய் நீ கவி எழுதும் பொழுது
உனக்குள் உணர்சிகள் ஊற்றேடுக்கவில்லையா..
பாசமாய் நீ கவி எழுதும் பொழுது
உனக்கும் பாசம் பரினமிக்கவில்லையா..
நேசமாய் நீ கவி எழுதும் பொழுது
உன் நெஞ்சம் கொஞ்சம் நெகிழவில்லையா...
உபதேசமாய் நீ கவி எழுதும் பொழுது
உனக்கும் அது உரைக்கவில்லையா..
உயிராய் நீ கவி எழுதும் பொழுது
உன் உயிர் கொஞ்சம் ஊசலாடவில்லையா..
வேகமாய் நீ கவி எழுதும் பொழுது
உனக்குள் ஓர் வேங்கை பாயவில்லையா..
இயற்கையை நீ கவி எழுதும் பொழுது
உனக்குள்ளும் ஓர் நதி ஓடவில்லையா..
நண்பனாய் நீ கவி எழுதும் பொழுது
நட்பு உன்னுடன் நடை போடவில்லையா...
பாடலாய் நீ கவி எழுதும் பொழுது
உனக்குள் ராகம் வந்து மெட்டு போடவில்லையா..
சிறப்பாய் நீ கவி எழுத இந்தக்கவிதை
உனக்கும் கொஞ்சம் உணர்த்தவில்லையா..?