எது நிரந்தரம்

எது நிரந்தரம்...?

நிரந்தரமில்லா உலகில்
நிலையில்லா மனமே
எதை தேடி ஓடுகிறாய்
எதை கண்டு ஆடுகிறாய்
இந்த
கோபம், வெறுப்பு,பகட்டு...
எதை உன்னுடனே
கொண்டு செல்வாய்
போகும் போது...
தொடரும் இந்த
பயணத்தில்
நிலை இல்லா படகு
தானடா நம் வாழ்க்கை...
நிதானித்து செல்
ஏற்றம் உண்டாகும்...
இல்லையேல்
நிம்மதி இழந்து
நிற்கதியற்று
நிற்பாய்
தனிமையில்
பிறகு வாழ்வதே
திண்டாட்டம் தான்...

காப்போம் பொறுமை...பத்மாவதி

எழுதியவர் : பாரதி (30-Sep-17, 5:58 pm)
Tanglish : ethu nirantharam
பார்வை : 639

மேலே