காதல்
உன் கருங்கூந்தலில்
வெள்ளை பூக்கள்
இரவில் உதித்த
நிலவைப் போல
உன் கையிலோ
சாமந்திப் பூ
கேட்காமலே
இறைவனுக்கு படைக்க
அன்பே !!
உனக்கு படைப்பதற்காக
என் கரம்
ஏந்தி கொண்டிருக்கிறது
ரோஜா மலரை !!
சிப்பிக்குள் இருக்கும்
முத்தை போல
உனக்குள் இருக்கும் காதலை
உதிர்த்து விடு
தேடி வருகிறேன்
நான்
கடை மடை வெள்ளம் போல்
அணை கட்டி தேக்கி விடு
உன் இதயத்திற்குள்
இரு மனம்
சேரட்டும்
முக்கூடல்
சந்திப்பில்
தூய்மையாய் !!