உணர்ந்தேன்

காற்றிற்க்கும் மரத்திற்கும் இருக்கும் காதலை உணர்ந்தேன்
மரம் மழையில் நினைந்த பின்பு காற்று மெல்ல தன்முந்தானையில் தலை துவட்டிய அழகில்
மலருக்கும் பனித்துளிக்கும் இருந்த காதலை உணர்ந்தேன்
விடியும் வரை மலரின் மடியிலேயே துயில் கொண்டு பனித்துளி ஆவி ஆன பொழுது
பாலைக்கும் ஈச்ச மரத்திற்கும் இருக்கும் காதலை உணர்ந்தேன்
நீரே இல்லாத போதும் இனிப்பை தரும் பேரிச்சம் பழம் உண்டபோது
கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் காதலை உணர்ந்தேன்
கறைகளை கடக்காத அலைகளாய் ஒருவருக்குள் ஒருவர் கலந்துவாழுகையில்
எழுத்திற்கும் தாளிற்கும் இருக்கும் காதலை உணர்ந்தேன்
உதடு ஒட்டியபடி மூடி கிடந்த புத்தகத்தை திறந்து பார்க்கையில்
கவிஞனுக்கும் பேனாவிற்கும் இருக்கும் காதலை உணர்ந்தேன்
நடை பழக்கும் குழந்தையாய் கை பிடித்து இருவரும் நடந்து செல்கையில்

சேர்ந்தபடி இருக்கும் இவர்களின் காதலை போலவே

ஆருயிரே உனக்கும் எனக்கும் இருக்கும் காதலை உன் பிரிவு
உணர்த்துகிறதடி பூங்கொடியாலே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் (16-Oct-17, 10:09 am)
Tanglish : unarnthen
பார்வை : 225

மேலே