எதையுமே திணிப்பதில்லை

தாய்ப்பாலை விட—சிறக்குமா
தெய்வத்தின் அபிஷேக நீர்?
அம்மாவின் கருவறைக்கு
ஈடாகுமோ சாமியின் கருவறை?

மந்திரிக்கப்பட்ட கயிறு தரும்
மகிமையைவிட
தாயின் தொப்புள் கொடிக்கயிறு
தரும் பாதுகாப்பு மகத்தானது

ஆன்மிகம் என்பது வாழ்வியல்
அது அன்பால் மட்டுமே ஆனது
அனைவரிடமும் அன்பு செலுத்தி
அரவணைத்து வாழ்வதே ஆன்மிகம்

ஆண்டவனை வேண்டுகிறோம்
அன்பு காட்டவும்—நாம்
கேட்ட வரங்கள் அத்தனையும்
கிடைக்க வேண்டியும்

இதையெல்லாம் நாம்
அடுத்தவருக்கு செய்தோமா?
இறுக்கி மூடிய மனதுக்குள்
இறைவன் எப்படி இருப்பான்?

இந்தியத் தத்துவங்கள் ஏராளம்
அதில் எல்லாமும் இருக்கின்றன
அதன் பெரும் சிறப்பு—நம்மீது
எதையுமே திணிப்பதில்லை

எழுதியவர் : கோ. கணபதி. (22-Oct-17, 9:10 am)
பார்வை : 101

மேலே